Tuesday, April 15, 2014

புதுவை நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்றுகிறது பாஜக

வரும் 24-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையை உள்ளடக்கிய 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

எப்போதுமே இல்லாத வகையில் இந்த தேர்தலில் தமிழகத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது. பாஜக பெரிய கூட்டணி பலத்துடனும், திமுக ஜாதி மதம் சார்ந்த சிறு  கட்சிகளுடனும் ஏனைய கட்சிகளான அதிமுக கம்யூனிஸ்ட்  மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனியாகவும் களம் காணுகின்றன.


புதுவையை பொறுத்தவரையில் ஒரு நாடாளுமன்ற தொகுதி மட்டுமே உள்ளது, அங்கு பாமக மற்றும் என் ஆர் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் பாஜக - வுடன் கூட்டணியில் இருக்கும் பாமக புதுவையில் தனித்து களம் காண்கிறது,  என் ஆர் காங்கிரஸ் பாஜக -வுடன் இணைந்து களம் காண்கிறது. பாமக-விற்கு மதிமுக மற்றும் தேமுதிக கட்சிகள் ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர்.

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் புதுவையில் பாஜக ஆதரிக்கும் என் ஆர் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வாக்கு சேகரிக்கின்றன, கூட்டணிக்குள்ளே குழப்பம் என்றெல்லாம் செய்திகள் வந்தன. முதலில் புதுவையில் யாருக்குமே ஆதரவு அளிக்காத தேமுதிக இப்போது பாமக விற்கு ஆதரவு தருவதாக அக்கட்சியின்  தலைமை  அறிவித்ததை அடுத்து "பாய்ந்த ராமதாஸ் பயந்த விஜயகாந்த்" என்பது போன்று செய்திதாள்கள் தலையங்கம் வெளியிட்டுள்ளன.

இங்கேதான் பாஜக -வின்  அரசியல் சதுரங்கம் மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு 40 தொகுதிகளில் முதல் வெற்றி தொகுதியை பதிவு செய்துள்ளது.


புதுவையில் பாமக என் ஆர் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி இருப்பதால் என் ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பாஜக கூட்டணில் இருப்பதால் அந்த கட்சி நரேந்திர மோடி பிரதமராக ஆதரவளிக்கும், அதேபோல் பாமக வெற்றிபெற்றால் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக நிச்சயமாக நரேந்திர மோடி பிரதமராக ஆதரவளிக்கும். ஆக 40 - இல் முதல் வெற்றிக்கனியாக புதுவை நாடாளுமன்ற தொகுதியை தனக்கு சாதகமாக மாற்றி உள்ளது பாஜக.

வாழ்த்துகள்...!

தமிழ் அவமானம் அல்ல எனக்கான அடையாளம். வருகைக்கு நன்றி.!

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. 

No comments:

Post a Comment