Tuesday, April 29, 2014

பணநாயகத்தை ஜனநாயகம் வெல்ல ஐந்து யோசனைகள்

பணநாயகத்தை ஜனநாயகம் வெல்ல வேண்டுமா இதோ ஐந்து யோசனைகள்...

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததன் பின்பு,

1) வேட்ப்புமனு தாக்கல் செய்யும்போது ஓட்டிற்கு பணம் கொடுத்த கட்சியை சார்ந்தவர்கள் வேட்ப்புமனு தாக்கல் செய்ய வந்தால் தகுந்த சாட்சி ஆவணம் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் பட்சத்தில் அந்த கட்சியின் வேட்பாளர்களின் வேட்ப்புமனுவை நிராகரிக்கலாம்.

2) வேட்ப்புமனு சரிபார்க்கும் தருணத்தில் ஒரு கட்சியை சார்ந்தவர்கள் ஓட்டிற்கு பணம் கொடுத்ததற்கான சாட்சி ஆவணம் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் பட்சத்தில் அந்த கட்சியின் வேட்பாளர்களின் வேட்ப்புமனுவை நிராகரிக்கலாம்.



3) மின்னணு வாக்கு எந்திரத்தில் கட்சிகளுக்கான சின்னங்கள் பொறிக்கப்படும்போது  ஒரு கட்சியை சார்ந்தவர்கள் ஓட்டிற்கு பணம் கொடுத்ததற்கான சாட்சி ஆவணம் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் பட்சத்தில் அந்த கட்சியின் சின்னத்தை இணைக்காமல் விட்டுவிடலாம்.

4) வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது  ஒரு கட்சியை சார்ந்தவர்கள் ஓட்டிற்கு பணம் கொடுத்ததற்கான சாட்சி ஆவணம் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் பட்சத்தில் அந்த கட்சிக்கு பதிவான வாக்குகளை எண்ணாமல் விட்டுவிடலாம்.

5) A என்ற கட்சியை சார்ந்த நபர் தன்னை B என்ற கட்சியின் நபர் என்று கூறி குழப்பங்களை செய்ய நினைக்கலாம் என்ற சூழ்நிலையை மேற்கண்ட 4 யோசனைகள் உண்டாக்கிவிடுவதால் இந்த ஐந்தாம் யோசனையும் நாம் சேர்த்துக்கொள்வோம்.

பணம் கொடுக்கும் நபர் எந்த கட்சியை சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஓட்டிற்கு பணம் கொடுத்ததாக ஒருவர் தகுந்த ஆவணங்களுடன் பிடிபட்டால் ஜனநாயகத்தை கொலை செய்தார் என்ற அடிப்படையில் எந்த வித பாகுபாடுமின்றி, எந்த நீதி மன்றத்திலும் மேல்முறையீடு செய்யமுடியாது என்ற சிறப்பு குறிப்புடன் 10 வருடம் சிறை தண்டனை விதிப்பதுடன், அந்த நபரை சார்ந்த அவரது குடும்பத்தின் 3 தலைமுறைக்கு (அவர், அவரது மகன், அவரது மகனின் மகன்) இந்திய குடியுரிமை பறிக்கப்படும் என்று சட்டம் கொண்டுவரப்படுமாயின் பணநாயகம் ஜனநாயகத்தை வெல்லாமல் தடுக்கலாம்.

தமிழ் அவமானம் அல்ல எனக்கான அடையாளம். வருகைக்கு நன்றி.!

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. 

No comments:

Post a Comment