Monday, April 7, 2014

முதல் கோணல் முற்றும் கோணலா?

இன்று தொடங்கியது பாராளுமன்ற தேர்தல் திருவிழா. தமிழகத்தில் வரும் 24 - ஆம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு பதிவிற்கான வேட்பு மனு பரிசீலனை இன்று தொடங்கியது. வரும் 9 - ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இறுதி நாள் என்ற நிலையில் இன்று நீலகிரி தொகுதியில் பா.ஜ.க, வேட்பாளர் மனு தள்ளுபடி. இதனால் நீலகிரி தொகுதியில் பா ஜ க போட்டியிட முடியாத நிலை உருவாகி உள்ளது.

நாட்டை ஆளப்போகிறோம் வல்லரசு ஆக்கப்போகிறோம் என்று கூவிகொண்டிருக்கும் கட்சியில் ஒரு வேட்பாளருக்கு ஒரு படிவம் கூட நிரப்ப தெரியவில்லையா என்ற கேள்வி எழும் போது காரணம் படிவம் நிரப்ப தெரியாதது அல்ல, தன்னை பற்றிய உண்மையான தகவல்களை மறைத்தது என்று தெரிகிறது.



இப்போதே இவ்வளவு தகிடு தத்தம் செய்யும் இவர்களை நம்பி எவ்வாறு வாக்களிப்பது என்ற கேள்வியும், கடைசியாக நம்பி இருந்த மோடியின் கட்சிக்காரகளும் இந்த நிலைதான் என்னும் போது யாருக்குதான் வாக்களிப்பது என்பதுதான் மக்களின் கேள்வி.

கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்களிப்பதில் பிரச்சனை, கட்சி பெண் நிர்வாகிகளுக்கு தொகுதி ஒதுக்கப்படாததில் பிரச்சனை, இப்போது 40 - இல் ஒரு தொகுதி இழந்தாகிவிட்டது என்ற நிலை. ஆகா முதல் கோணல் முற்றும் கோணலாக முடிந்துவிடுமோ என்ற பயமும் தமிழக பா ஜ க கட்சியினரை தொற்றிக்கொண்டுள்ளது.

பார்க்கலாம் மோடி வித்தை பலிக்கிறதா என்று!

தமிழ் அவமானம் அல்ல எனக்கான அடையாளம். வருகைக்கு நன்றி.!

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. 

No comments:

Post a Comment