Saturday, April 5, 2014

காமராஜர் ஆட்சியும் களவாணி காங்கிரசும்

காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் என்பதும் ஒரு சிறந்த அரசியல் தலைவர் என்பதும் நாம் அறிந்ததே.



1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார் காமராஜர் அவர்கள். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசு எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார்.

மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராசர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராசரைச் செயலாளராக ஆக்கினார்.

காமராசர்  அவர்கள் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.

காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார்.  (மேற்கூறிய தகவல்கள் விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்டது)

காமராஜர் அவர்கள் செய்த நன்மைகள் பல இருந்தாலும் கல்வி என்பதே எப்போதும் முதன்மையாக மக்களால் பேசப்படுகிறது, காரணம் அன்று ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை மிக நுட்பமான தனது அறிவாற்றலால் மக்களுக்கு கிடைக்க செய்தார், அதன் விளைவே இன்று நீங்களும் நானும் கல்வி கற்று நாகரீக உடை அணிந்து பல நிறுவனங்களில் பணிபுரிகிறோம்.

இந்த படிக்காத மேதையை தமிழக அரசியல் காணாதிருந்தால், துணி துவைப்பவர் மகன் துணி துவைத்துகொண்டே இருப்பான், முடி வெட்டுபவர் மகன் முடிவெட்டிகொண்டே இருப்பான், பனை ஏறுபவன் மகன் பனை எறியாகவே இருந்திருப்பான்.

கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் காமராஜர் அவர்கள் என்பதற்கு ஒரு சிறந்த நிகழ்வு,

இலவசமாக பள்ளிக்கூடங்கள் கட்டி இலவசமாக கல்வி கற்று கொடுத்தும் பலரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்புவதை அறிந்த இந்த தங்க தலைவன் அதன் காரணத்தை அறிய விளைந்தார். அதற்கான காரணம் பசி என்றறிந்தபோது அப்படியானால் உடனடியாக மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்த கட்டளையிட்டார் காமராஜர் அவர்கள்.

இப்படியாக எப்படியாவது என் மக்களுக்கு நல்லது செய்துவிட வேண்டும் என்று எண்ணிய காமராஜர் அவர்கள் தேர்தலில் தோல்வியை தழுவியபோது அவர் நண்பர் ஒருவர் கூறுகிறார் நீங்கள் செய்த நல்லவைகளை மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்டிருந்தால் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெற்றிருப்பீர்கள் என்று.

அப்போது அய்யா காமராஜர் அவர்கள் சொன்ன வார்த்தைகள், பெற்ற தாய்க்கு சேலை எடுக்கு கொடுத்தமகன் அதை ஊர் முழுவதும் சொல்லி பெருமைகொள்ளவேண்டிய அவசியம் இல்லை, என் கடமையை நான் செய்தேன் என்றார்.

தான் பிரதமர் ஆகும் வாய்ப்பு இருமுறை தனக்கு கிடைக்கப்பெற்றும் அதை மற்றவர்களுக்கு விட்டுகொடுத்த பெரும் தலைவர்.

இப்படிபட்ட ஒரு உன்னத தலைவரின் பெயரை இந்த களவாணி காங்கிரஸ் இப்போதும் கூட நாங்கள் என்னவெல்லாம் செய்தோம் என்று பட்டியலிடும்போது சேர்த்துக் கொள்கிறார்கள். மூச்சுக்கு முன்னூறு முறை காமராஜர் ஆட்சி செய்வோம் என்று சொல்கிறார்கள்.

தன்னலம் இல்லாத ஒரு காங்கிரஸ் தலைவன் அல்லது தொண்டன் இருப்பான இந்த தமிழக காங்கிரஸ் கட்சியில், பதவி சுகத்துக்காக ஒரு இனத்தையே அளித்த இந்த துரோகிகளுக்கு காமராஜர் ஆட்சி பத்தி பேச என்ன அருகதை இருக்கிறது.

பள்ளி கல்லூரி என்று கட்டி வைத்துக்கொண்டு கல்வியை வியாபாரமாய் செய்துகொண்டிருக்கும் காங்கிரஸ்காரன் எத்தனையோபேர் இருக்கிறார்கள் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது இலவச கல்வி தந்த காமராஜரை உரிமை கொண்டாட.

காங்கிரஸ் கட்சியை சார்ந்திருந்தார் என்பதற்காக இன்னமும் அவர் செய்த நல்ல செயல்களை சொல்லித்தான் இந்த ஈன பிறவிகள் வாக்கு கேட்க்கின்றன, ஏன் அதன் பிறகு எத்தனையோ பேர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தீர்கள் அப்போதெல்லாம் என் செய்தீர்கள். அப்படி எதையாவது செய்திருந்தால் அதை சொல்லி அல்லவா வாக்கு கேட்டிருப்பீர்கள்.

ஒரு நல்ல தலைவன் அவர் தான் செய்த நன்மைகளையே சொல்லி வாக்கு கேட்க்க விருப்பமில்லாமல் தோல்வியை தழுவிய அன்னாரின் பெருமைகளை சொல்லி வாக்கு கேட்க்க இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை இனியாவது நாம் புரிந்துகொள்ள முன்வரவேண்டும் தமிழ் சொந்தங்களே.

இன்னமும் காமராஜர் ஆட்சி என்று சொல்லி வாக்கு கேட்க்கும் களவாணி காங்கிரஸ் கட்சியை தமிழன் நலன் கருதி, தமிழன் பாதுகாப்புக் கருதி தமிழ் நாட்டில் இல்லது செய்திட வேண்டும்.

தமிழ் அவமானம் அல்ல எனக்கான அடையாளம். வருகைக்கு நன்றி.!

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. 

No comments:

Post a Comment